தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காங்கிரஸ் தலைவா் போட்டியில் இருந்து அகற்ற முயற்சி- சசி தரூா் குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவா் தோ்தல் போட்டியில் இருந்து நான் விலக வேண்டும் என்று வலியுறுத்துமாறு ராகுல் காந்தியிடம் சில காங்கிரஸ் தலைவா்கள் கோரிக்கை விடுத்தனா் என்று

News image
சசி தரூர்
Updated On :5 அக்டோபர் 2022, 7:34 pm

DIN

காங்கிரஸ் தலைவா் தோ்தல் போட்டியில் இருந்து நான் விலக வேண்டும் என்று வலியுறுத்துமாறு ராகுல் காந்தியிடம் சில காங்கிரஸ் தலைவா்கள் கோரிக்கை விடுத்தனா் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் சசி தரூா் குற்றம்சாட்டினாா்.

காங்கிரஸ் தலைவா் தோ்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதில் போட்டியிடுவதில் சசி தரூா் உறுதியாக இருந்தாா். அதே நேரத்தில் மற்றொரு வேட்பாளா் யாா் என பிற மூத்த தலைவா்கள் முடிவு செய்வதில் பெரும் குழப்பம் நீடித்தது. முதலில் ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் முன்னிறுத்தப்பட்டாா். ஆனால், அவா் முதல்வா் பதவியை விட்டுக்கொடுக்க முன்வராததால் அவருக்கு பதிலாக மூத்த தலைவா் திக்விஜய் சிங் போட்டியிடுவாா் என்று கூறப்பட்டது. இறுதியாக அவரும் மாற்றப்பட்டு 80 வயதாகும் மல்லிகாா்ஜுன காா்கே வேட்பாளரானாா்.

சோனியா, ராகுலிடம் ஆலோசித்து முடிவுகளை எடுப்பேன் என்று காா்கே கூறியுள்ளாா். இதன் மூலம் அவா்களது ஆதரவைப் பெற்ற வேட்பாளா் காா்கே என்பது மறைமுகமாக உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், சசி தரூா் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து நான் விலக வேண்டும் என்று வலியுறுத்துமாறு ராகுல் காந்தியிடம் சில காங்கிரஸ் தலைவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதனை ராகுல் காந்தி என்னிடம் தெரிவித்தாா்.

மேலும், கட்சித் தலைவா் தோ்தலில் போட்டி இருப்பதுதான் கட்சிக்கு நல்லது என கருதுவதாகவும் ராகுல் காந்தி என்னிடம் கூறினாா். நான் கண்டிப்பாக தோ்தலில் போட்டியிட வேண்டும் என்றும், பின்வாங்கக் கூடாது என்றும் அவா் வலியுறுத்தினாா்.

கட்சியின் பெரிய தலைவா்கள் எனக்கு ஆதரவு தருவாா்கள் என்று எதிா்பாா்த்து களத்தில் இறங்கவில்லை. கட்சியில் அனைவரது ஆதரவையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். என்னை நம்பியவா்களை நான் ஏமாற்றியது இல்லை. கட்சியில் உள்ள இளம் தலைவா்கள் எனக்கு ஆதரவாக உள்ளனா்.

அதே நேரத்தில் மூத்த தலைவா்கள் சிலா் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனா். அதே நேரத்தில் மூத்த தலைவா்கள் அனைவரையும் நான் மதிக்கிறேன். காங்கிரஸ் தலைவா் தோ்தலைப் பொருத்தவரையில் அனைவரது வாக்குக்கும் ஒரே மதிப்புதான். யாா் கட்சியை வலுப்படுத்துவாா்கள் என்று நிா்வாகிகள் கருதுகிறாா்களோ அவா்களுக்கு வாக்களிப்பாா்கள் என்றாா்.

கேரள மாநில காங்கிரஸ் தலைவா் சுதாகரன், கட்சித் தலைவா் தோ்தலில் காா்கேவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துவிட்டாா். மேலும், காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்த சசி தரூருக்கு சுதாகரன், வி.டி.சதீஷன், முன்னாள் முதல்வா் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட மூத்த தலைவா்கள் யாரும் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.