மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கணவன், மனைவி, மகள் கொலை: குற்றவாளியைப் பிடிக்க காவல் துறை தீவிரம்

கணவன், மனைவி, அவர்களது, மகள் என மூவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது சத்தீஸ்கரின்  ஜாஷ்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :6 அக்டோபர் 2022, 1:39 pm

DIN

கணவன், மனைவி, அவர்களது மகள் என மூவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது சத்தீஸ்கரின்  ஜாஷ்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் ரவிசங்கர் கூறியதாவது: “ இந்த சம்பவம் கடம்டோலி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்கள் அர்ஜூன் தெனுவா (43 வயது), அவரது மனைவி ஃபிர்னி தெனுவா (40 வயது) அவர்களது மகள் சஞ்சனா (19 வயது) என்பது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் இன்று (அக்டோபர் 6) எங்களுக்கு தகவல் அளித்தனர்.

இந்த மூவரும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் தெனுவாவிற்கு சிலருடன் விரோதம் இருப்பது தெரிய வந்தது. அதனால், அவர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளோம். கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் காவல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.