ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 
ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

காஷ்மீர் மண்டல காவல்துறையின் கூற்றுப்படி, கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்தவர்கள் மற்றும் பல பயங்கரவாத குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் காஷ்மீர் மண்டல காவல்துறை ட்வீட் செய்துள்ளது.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் உள்ள டாங்பாவா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com