அக்.12ம் தேதி இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளவிருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திரிபுராவில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் முர்மு திரிபுராவில் உள்ள மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தில் புதன்கிழமை காலை 11.15 மணியளவில் தரையிறங்க உள்ளார். முர்மு பதவியேற்ற பிறகு திரிபுரா மாநிலத்திற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்த பயணத்தின் போது, முர்மு குவாஹாத்தியில் இருந்து கொல்கத்தா எக்ஸ்பிரஸ் அகர்தலா வரை நீடிக்கப்படும் ரயிலைக் கொடியசைத்துத் துவக்கி வைக்கிறார்.
மேலும், நிச்சிந்தாபூரில் கட்டப்பட்ட டிரான்ஸ்-ஷிப்ட்மென்ட் யார்டை விடியோ இணைப்பு மூலம் அவர் திறந்து வைக்கிறார்.
இதைத்தவிர, மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள நரசிங்காரில் புஷ்பந்தா அரண்மனை அருங்காட்சியகம் மற்றும் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு குடியரசுத் தலைவர் அடிக்கல் நாட்ட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தஞ்சாவூா் அருகே இன்று விஜய் பங்கேற்கும் கூட்டம்!

தஞ்சாவூருக்கு நாளை தமிழக முதல்வா் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை

பெரும்புலீஸ்வரா் கோயில் மாசிப் பெருவிழா

திமுகவை தவிர வேறு யாருடனும் காங்கிரஸ் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை: காா்த்தி சிதம்பரம்
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

