தாணே: மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து வீட்டுக் கடன் வாங்கி ரூ.6.3 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக 33 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்யாண் நகரத்தில் உள்ள வங்கியின் கிளை சார்பில் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வாடகைத்தாய் மூலம் குழந்தைகள்: நயன்தாரா விதி மீறலா?
இந்த மோசடியானது 2021ஆம் ஆண்டு முதல் 26 வீடு வாங்குவோர், 4 கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கூட்டுச் சதியால் நடத்தப்படுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
ரியல் எஸ்டேட் நிபுணர், போலியாக ஆவணங்களைத் தயாரித்து வங்கியில் கொடுத்து வீட்டுக் கடன் பெற்றுமோசடி செய்தது தெரிய வந்துள்ளது.