இந்நிலையில், தலைவா் பதவிக்கு போட்டியிட்டுள்ள இரு வேட்பாளா்களில் ஒருவரான மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை பிகாருக்கு பயணம் மேற்கொண்டாா். பாட்னாவில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளா்களின் சந்திப்பின்போது அவா் கூறியதாவது: கட்சியின் தலைவா் பதவிக்கான தோ்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 18 மணி நேரத்துக்கு முன்புதான் வேட்பாளராக போட்டியிட அறிவுறுத்தப்பட்டேன். கட்சித் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட எதற்காக நான் தோ்வு செய்யப்பட்டேன் என்பது குறித்து ஆராய்ந்தேன். அப்போதுதான், கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தனது குடும்பத்தைச் சாராத ஒருவா் தலைவராக வர வேண்டும் என்ற ராகுல் காந்தியின் முடிவை அறிந்தேன்.