மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் பயணிகள் பேருந்தில் திடீரென தீப்பிடித்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பேகான் தாலுகாவில் உள்ள பீமாசங்கர் சாலையில் காலை 6.30 மணியளவில் இந்த தீ விபத்து சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை அருகே பிவாண்டியில் உள்ள கிராமத்திலிருந்து புணே மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பீமாசங்கர் கோயிலுக்கு 27 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
பீமாசங்கர்-கோடேகான் சாலையில் ஷிண்டேவாடி அருகே பேருந்து வந்தபோது, மற்றொரு பேருந்து ஓட்டுநர், பேருந்திலிருந்து புகை வெளியேறுவதாகக் கூறினார். பின்னர், அவசர அவசரமாகப் பேருந்து நிறுத்தப்பட்டு அதிலிருந்த பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர்.
கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும், பேருந்து முழுவதும் தீ பரவத் தொடங்கி மளமளவென எரிய ஆரம்பித்தது.
பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாகப் பேருந்திலிருந்த அனைத்து பயணிகளும் எந்தவித காயமின்றி உயிர்த்தப்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான முதன்மைக் காரணம் ஷார்ட் சர்க்யூட் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!

காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


