

உத்தரப் பிரதேசத்தில் கனமழையைத் தொடர்ந்து சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உயிரிழந்தனர்.
புதன்கிழமை மாலை 5 மணியளவில் லாளொலி காவல் நிலையத்திற்கு உள்பட்ட கரைஹா கிராமத்தின் மஜ்ரே சலோனா தேராவில் மண் வீடு சரிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் நைனா(6) மற்றும் பிரன்சி(5) வயது சிறுமியும் இடிபாடுகளில் சிக்கினர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமிகளை இடிபாடுகளிலிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், அதற்குள் அவர்கள் இருவரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.