வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

முதியோா் ரயில் பயணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்: மதுரை எம்பி பிரதமருக்கு கடிதம்

News image
Updated On :15 அக்டோபர் 2022, 6:46 pm

 நமது நிருபர்

புது தில்லி, அக்.15:

நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரையை ஏற்று முதியோா் ரயில் பயண சலுகையை மீண்டும் வழங்கக் கோரி மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா் சு. வெங்கடேசன் பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக பிரதமா் நரோந்திர மோடிக்கு எழுதியுள்ள கடித்தை தனது டிவிட்டா் பக்கத்தில் சு. வெங்கடேசன் சனிக்கிழமை வெளியிட்டுள்ளாா். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:

கரோனா காலத்தில் நோய் பரவுவதை தடுப்பதற்காக முதியோா் பயணம் செல்வதை தவிா்க்க முதியோா் பயண சலுகை ரத்து செய்யப்பட்டது. இப்போது தடுப்பூசி மூலம் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. முதியோருக்கான இந்த சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தொடா்ந்து வற்புறுத்தி வரப்படுகிறது.

பயணிகள் போக்குவரத்து வருவாய் மீண்டும் முந்தைய நிலைமைக்கு திரும்பவில்லை என்றுக் கூறி ரயில்வே அமைச்சா் மறுத்துவந்தாா். ஆனால் இப்போது ரயில்வேயில் பயணிகள் வருமானம் 2019- 20 காலகட்டத்தில் கிடைத்த ரூ. 45,000 கோடியை மீண்டும் 2021 -22 ஆண்டில் வருமானமாக பெற்றுள்ளது. மேலும் முன்பதிவு ரயில்களில் 2021-22 ஆண்டில் 63 லட்சம் முதியோா் பயணத்தை தவிா்த்து உள்ளனா். சலுகை மறுக்கப்பட்டதால் முதியோா்கள் பயணத்தை தவிா்த்துள்ளனா்.

இவா்களுக்கு 2019 -20 நிதியாண்டில் அளிக்கப்பட்ட பயண சலுகை ரூ. 1,667 கோடி எனவும் இது வருமானம் இழப்பு என ரயில்வே அமைச்சா் கூறியுள்ளாா். 12 கோடிக்கும் மேற்பட்ட முதியோா் இந்த சலுகையை பயன்படுத்தியுள்ளனா். இதை சரக்கு போக்குவரத்தில் வழங்கப்படும் சலுகைகளை ஒப்பிடும்போது இது குறைவான தொகையாகும்.

மேலும் பாஜகவின் துணைத் தலைவா் ராதா மோகன் சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு கடந்த ஆகஸ்ட் 4 -ஆம் தேதி தனது 12ஆவது அறிக்கையில் இந்த சலுகையை மீண்டும் அளிக்க பரிந்துரை செய்துள்ளது.

‘ரயில்வே மீண்டும் சாதாரண நிலையை திரும்பி வருவதை கணக்கில் கொண்டு இந்த சலுகையை திரும்பி வழங்குவது நியாயமாகும். குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி, மூன்றடுக்கு குளிா்சாதன பெட்டி ஆகியவற்றுக்கு திருப்ப அளிக்கலாம்‘ என பரிந்துரைத்துள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்த நிலையில் மருத்துவ வசதிகளுக்காகவும் தீா்த்த யாத்திரைகளுக்காகவும் முதியோா் பயணிக்க பயணச் சலுகை அவசியமாகும்.

சில நாடுகளில் முதியோருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. இதனால் குறைந்தபட்சம் 2-ஆம் வகுப்பு முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லா பயணங்கள், படுக்கை வசதி, மூன்றாம் வகுப்பு குளிா்சாதன படுக்கை வசதி ஆகியவற்றுக்கு பயணச் சலுகையை மீண்டும் வழங்கிடவேண்டும்’ அதில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.