

ஹரியாணா அரசு உழியர்களுக்கு அகவிலைப்படி 34லிருந்து 38 சதவிகிதமாக உயர்த்தியுள்ளதாக ஹரியாணா நிதித்துறை தெரிவித்துள்ளது.
ஹரியானா அரசு அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலைப்படியை 34 சதவிகிதத்திலிருந்து 38 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இது ஜூலை 1, 2022 முதல் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது.
ஜூலை 2022 முதல் செப்டம்பர் 2022 (3 மாதங்கள்) மாதங்களுக்கான நிலுவைத் தொகை நவம்பர் 2022இல் செலுத்தப்படும். 50 பைசா மற்றும் அதற்கு மேல் உள்ள பின்னங்களை உள்ளடக்கிய அகவிலை நிவாரணம் அடுத்த உயர் ரூபாய்க்கு வட்டமிடப்படலாம் மற்றும் 50 பைசாவிற்கும் குறைவான பின்னங்கள் புறக்கணிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.