அருணாசலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு! 

அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
அருணாசலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு! 
Published on
Updated on
1 min read

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன கடைசி வீரர்களின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

அருணாசலில் சியாங் மாவட்டத்தில் உள்ள லிகாபலி என்ற பகுதியிலிருந்து 5 வீரர்களுடன் அதிநவீன இலகுரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த ஹெலிகாப்டா், நேற்று காலை 10.43 மணியளவில் விபத்துக்குள்ளானது.

இதுகுறித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினா் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது 4 வீரா்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய ஒருவரின் உடல் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில், இன்று காலை ராணுவ வீரரின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த மாதம் அருணாசலப் பிரதேசத்தில் இரண்டாவது முறையாக ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகியது. கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி, அந்த மாநிலத்தில் உள்ள தவாங் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகி, விமானி ஒருவா் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com