ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பாலங்கள் கட்டிக்கொள்ளலாம்... ஆனால், அமெரிக்காவுக்குப் பாடம் புகட்ட சரியான நேரம் இதுதான்: ஈரான்

பாலங்களை கட்டிக்கொள்ளலாம்.. ஆனால், அமெரிக்காவுக்குப் பாடம் புகட்டும் நேரம் மீண்டும் வராது என்று ஈரான் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

அப்பாஸ் அராக்சி - டிரம்ப். - படம்: ஏபி.

Updated On :7 ஏப்ரல் 2026, 3:55 am

அமெரிக்காவால் இடிக்கப்பட்ட பாலங்களை மீண்டும் கட்டிக்கொள்ளலாம். ஆனால், அவர்களை (அமெரிக்கா) கடுமையாக பாடம் புகட்டுவதற்கான காலம் மீண்டும் ஒருமுறை வராது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

அணுஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி, ஜெனீவாவில் நடைபெற்ற ஈரான் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவங்கள் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் உச்சத்தலைவரும், ஈரானின் மதகுருவுமான அலி அயத்துல்லா கமேனி, அவரது குடும்பத்தினர், ராணுவ உயரதிகாரிகள் 50 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் வளைகுடா நாடுகள் மீதும், இஸ்ரேல் மீது ஈரான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

5-வது வாரமாக போர் தொடர்ந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததன் காலக்கெடு நிறைவு பெறவுள்ள நிலையில், பாலங்கள், எரிசக்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்டவைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரஜ் பகுதியில் அமைந்துள்ள மத்திய கிழக்கு நாடுகளின் மிக உயரமான பாலம் என்ற பெருமை கொண்ட பி1 பாலத்தை அமெரிக்க கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி அழித்தனர்.

இரண்டு முறை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், முதலில் பாலம் தகர்க்கப்பட்டு, அடுத்த தாக்குதலில், அங்கிருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “அமெரிக்காவால் இடிக்கப்பட்ட பாலங்களை மீண்டும் கட்டிக்கொள்ளலாம். ஆனால், அவர்களை (அமெரிக்கா) கடுமையாக பாடம் புகட்டுவதற்கான காலம் மீண்டும் ஒருமுறை வராது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், அப்பாஸ் மற்றும் டிரம்ப்பின் பேச்சுகள் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

Summary

Amid escalating tensions with the United States, Iranian Foreign Minister Abbas Araghchi has issued a stern statement. He declared that teaching America a lesson is now Iran’s primary objective. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.