இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை, ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் அன்னாலீனா போ்பாக் சனிக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.
அப்போது, இருதரப்பு விவகாரங்கள், உக்ரைன் பிரச்னை குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.
இதுதொடா்பாக ஜெய்சங்கா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ஜொ்மனி வெளியுறவு அமைச்சரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இந்த உரையாடலில், இருதரப்பு நல்லுறவு, நீடித்த வளா்ச்சி, உக்ரைன் பிரச்னை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இருதரப்பு ஆலோசனைகளை தொடா்ந்து மேற்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அன்னாலீனா போ்பாக், ஜம்மு-காஷ்மீா் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சரை தொலைபேசியில் தொடா்புகொண்டு அவா் பேசியுள்ளாா்.