ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாநகராட்சி தேர்தலில் வென்றால் 5 ஆண்டுகளில் தில்லி தூய்மையாகிவிடும்: கேஜரிவால்

மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால், ஐந்தாண்டுகளில் தில்லியை தூய்மைப்படுத்துவோம் என்று கேஜரிவால் வாக்குறுதி அளித்தார். 

News image
Updated On :27 அக்டோபர் 2022, 12:32 pm

DIN

தில்லியில் இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால், ஐந்தாண்டுகளில் தில்லியை தூய்மைப்படுத்துவோம் என்று கேஜரிவால் வாக்குறுதி அளித்தார். 

கேஜரிவாலின் வருகையை முன்னிட்டு, காஜிபூர் குப்பைக் கிடங்கு மற்றும் அப்பகுதிக்குச் செல்லும் சாலைகளில் ஏராளமான பாஜக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவருக்கு எதிராக கருப்புக் கொடிகளை காட்டி முழக்கங்களை எழுப்பினர். 

இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினரும் பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் காஜிபூர் அருகே தில்லி-உத்தரப் பிரதேச எல்லைக்குச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Story image

குப்பைக் கிடங்கு தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால், 

தில்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுக் கால பாஜக ஆட்சியில் மூன்று குப்பை மலைகளை உருவாக்கி நகரம் முழுவதும் கழிவுகளால் நிரப்பியுள்ளது. 

காஜிபூர் குப்பை மேடு என்பது பாஜகவின் மோசமான செயல்கள் மற்றும் ஊழல்களின் மலை. இதற்கு வரவிருக்கும் மாநகராட்சி தேர்தலில் மக்களாகிய நீங்கள் பதில் சொல்லுங்கள். 

இந்த குப்பை மலையைப் பாதுகாக்க பாஜவினர் காவல்துறையை நியமித்துள்ளனர். அனைத்து தீய சக்திகளும் நமக்கு எதிராக சதி செய்துள்ளது. 

நடைபெறவிருக்கும் மாநகராட்சி தேர்தலில் பாஜக ஆதரவாளர்கள் கூட அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். 

கடந்த 15 ஆண்டுகளில் தில்லியில் உள்ள குப்பை மேடுகளை அகற்றுவதில் பாஜக தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், வரவிருக்கும் எம்சிடி தேர்தலில் ஆம் ஆத்மி மீது நம்பிக்கை வைக்குமாறு பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.