மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அந்தக் கடைசி காஷ்மீரி பண்டிட்டும் கிளம்பிவிட்டார்..

ஷோபியான் மாவட்டம் சௌதாரிகுந்த் கிராமத்தில் வசித்து வந்த கடைசி காஷ்மீரி பண்டிட்டான டோல்லி குமாரியும், தனது வீட்டை காலி செய்து கொண்டு ஜம்முவுக்கு குடிபெயர்ந்துவிட்டார்.

News image

அந்தக் கடைசி காஷ்மீரி பண்டிட்டும் கிளம்பிவிட்டார்..

Updated On :28 அக்டோபர் 2022, 11:06 am

DIN


ஜம்மு: ஷோபியான் மாவட்டம் சௌதாரிகுந்த் கிராமத்தில் வசித்து வந்த கடைசி காஷ்மீரி பண்டிட்டான டோல்லி குமாரியும், தனது வீட்டை காலி செய்து கொண்டு ஜம்முவுக்கு குடிபெயர்ந்துவிட்டார்.

வியாழக்கிழமை மாலை, தனது வீட்டை பூட்டிக் கொண்டு அவர் ஜம்முவுக்கு இடம் பெயர்ந்திருப்பதன் மூலம், அந்த கிராமத்தில் இருந்த ஏழு காஷ்மீரி பண்டிட்டுகள் குடும்பத்தில், கடைசி காஷ்மீரி பண்டிட்டும் ஊரை காலி செய்துவிட்டதை உறுதி செய்திருக்கிறது.

காஷ்மீரி பண்டிட்டுகளை குறி வைத்து நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கிருக்கும் காஷ்மீரி பண்டிட்டுகள் குடும்பத்துடன் ஜம்முவுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.

அங்கு சூழ்நிலையே அச்சம் தருவதாக இருக்கிறது. நான் வேறு என்னதான் செய்ய முடியும் என்று கடைசியாக ஊரை காலி செய்த டோல்லி மன வருத்தத்துடன் கூறுகிறார்.

அக்டோபர் 15ஆம் தேதி காஷ்மீரி பண்டிட் பூரன் கிரிஷன் பட் சௌதாரிகுந்த் கிராமத்தில் உள்ள தனது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு முன்பு சோடிகாம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு காஷ்மீரி பண்டிட்டும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சொல்லுங்கள்.. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது, அடுத்து நீங்கள்தான் என்ற ஒரு நடுக்கம் ஏற்படாதா என்றும் டோல்லி கேள்வி எழுப்புகிறார்.

இதனால், அந்தக் கிராமத்தில் இருந்த பண்டிட்டுகளின் வீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளன. தங்களது ஆப்பிள் தோட்டங்களில் விளைந்த ஆப்பிள்கள் விற்பனையாகும் வரை கூட அவர்கள் வீட்டில் தங்கியிருக்க நினைக்கவில்லை.

தங்கள் வீட்டின் கொள்ளைப்புரத்தில் ஆயிரக்கணக்கான பெட்டிகளை விடுவிட்டு, அக்கம் பக்கத்தில் உள்ள முஸ்லிம்களிடம் ஆப்பிள்களை சந்தையில் கொண்டு போய் சேர்த்துவிடுமாறு கூறிவிட்டு கண்ணீருடன் வாழ்ந்து வந்த பகுதிகளை வீட்டு வெளியேறிவிட்டனர்.

இதுவரை சௌதாரிகுந்த் மற்றம் சோடிபோரா கிராமத்தில் 11 பண்டிட் குடும்பங்கள் வசித்து வந்தன. இப்போது அனைவரும் ஜம்முவுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.