சென்னை: பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த சதீஷ், மாணவியை கொலை செய்தது ஏன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னையை அடுத்த பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி சதீஷ் கொலை செய்தார்.
இதையும் படிக்க.. அந்தக் கடைசி காஷ்மீரி பண்டிட்டும் கிளம்பிவிட்டார்..
சத்யா கொலையில் கைது செய்யப்பட்ட சதீஷை, காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறை விசாரணையில் சதீஷ் அளித்த வாக்குமூலத்தில், 10 நாள்கள் பின்தொடர்ந்து சென்று கடைசியாக சத்யாவைக் கொன்றதாக கூறியுள்ளார்.
சதீஷ் மேலும் கூறியிருப்பதாவது, சத்யாவை தான் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், ஆனால், அவரது பெற்றோர் சத்யாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயன்றதால், கொன்றதாகவும் கூறியுள்ளார்.
சத்யாவின் தாய் கூறியதால் தன்னுடன் பேசுவதை சத்யா நிறுத்தி விட்டதாகவும், நாள்தோறும் சத்யாவைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து சென்றும், கொல்ல மனமில்லாமல் 10 நாள்களாக சத்யாவை பின்தொடர்ந்து சென்றுவிட்டு திரும்பி வந்துவிட்டதாகவும், இறுதியாக அவரை ரயில் முன் தள்ளிக் கொலை செய்ததாகவும் சதீஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

