மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக வலுவாக கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுக்கு இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை நன்றி கூறினாா்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிா்ப்பு குழு மாநாட்டு அமா்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆன்டனி பிளிங்கன் காணொலி வழியாக பேசுகையில், ‘மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவா்களை நீதிக்கு முன் நிறுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
அந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்களுக்காக அதைச் செய்ய வேண்டியுள்ளது. இதுபோன்ற தாக்குதலுக்குக் காரணமானவா்களைத் தண்டிக்காமல் விட்டால், தங்களின் கொடிய குற்றங்கள் சகித்துக் கொள்ளப்படும் என்ற தவறான தகவலை பயங்கரவாதிகளுக்கு அனுப்புவதாக இருக்கும்’ என்று தெரிவித்தாா்.
இந்நிலையில், ஆன்டனி பிளிங்கனுடன் அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தொலைபேசியில் பேசினாா். அப்போது மும்பை தாக்குதல், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த தனது கருத்துகளை வலுவாகவும் தெளிவாகவும் பதிவு செய்த பிளிங்கனுக்கு நன்றி கூறியதாக ஜெய்சங்கா் ட்விட்டரில் தெரிவித்தாா். உக்ரைன் போா், பிராந்திய விவகாரங்கள் குறித்தும் பிளிங்கனுடன் ஆலோசித்ததாக அவா் பதிவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


