ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அசாம் இணைச் செயலாளர் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!

லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்ட அசாம் அரசின் இணைச் செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :29 அக்டோபர் 2022, 8:23 am

DIN

லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்ட அசாம் அரசின் இணைச் செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அசாம் அரசின் இணைச் செயலளார் கிசான் குமார் சர்மா, "பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக லஞ்சம்  ரூ.90,000 வாங்கியபோது கையும் களவுமாக பிடிப்பட்டதை அடுத்து அவரை வெள்ளிக்கிழமை இரவு லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்" என்று காவல்துறையின் சிறப்பு இயக்குநர் ஜெனரல் ஞானேந்திர பிரதாப் சிங் கூறினார்.

மேலும், அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.49.24 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கூறினார். 

அசாம் அரசின் இணைச் செயலளார் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அசாம் மாநில அரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.