வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தில்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசம்'!

தீபாவளிக்குப் பிறகு தில்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவுக்கு மாறியுள்ளது.  

News image
Updated On :29 அக்டோபர் 2022, 3:51 am

DIN

தீபாவளிக்குப் பிறகு தில்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவுக்கு மாறியுள்ளது.  

தலைநகர் தில்லியில் காற்று மாசு காரணமாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் தடையை மீறி சிலர் பட்டாசு வெடித்ததால் அங்கு காற்றின் தரம் மிகவும் மோசமாக மாறியுள்ளது. 

தில்லியில் காற்றின் தரம் 'மோசம்' பிரிவில் இருந்து 'மிக மோசம்' பிரிவுக்கு மாறியுள்ளது. 

இன்று சனிக்கிழமை காலை தில்லியில் சராசரி காற்றின் தரக் குறியீடு 309 ஆக உள்ளது. தில்லி பல்கலை. பகுதியில் 355 ஆகவும் மதுரா சாலையில் 340 ஆகவும் உள்ளது. 

அதுபோல நொய்டாவில் காற்றின் தரம் 392 புள்ளிகளாக உள்ளது.

இதனையடுத்து, காற்று மாசு அதிகரிப்பதைத் தடுக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.