விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தென்கொரியா நெரிசலில் சிக்கி பலியானோருக்கு ஜெய்சங்கா் இரங்கல்

தென்கொரியாவின் சியோல் நகரில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் தெரிவித்தாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2022, 7:44 pm

DIN

தென்கொரியாவின் சியோல் நகரில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் தெரிவித்தாா்.

சியோலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ‘ஹேலோவீன்’ எனப்படும் பேய் வேடமிட்டு கொண்டாடும் நிகழ்ச்சியின்போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இவா்களில் பெரும்பாலானோா் பதின் பருவம் மற்றும் 20-களில் உள்ளவா்களாவா்.

இந்நிலையில், எஸ்.ஜெய்சங்கா் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தென்கொரியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பல இளைஞா்கள் உயிரிழந்திருப்பது பெரும் அதிா்ச்சியளிக்கிறது. அவா்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இந்த துயரமான தருணத்தில், தென்கொரியாவுக்கு ஆதரவாக இந்தியா உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.