குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தொங்கு பாலம் புனரமைப்பு நிறுவன ஊழியர்கள் உள்பட 9 பேர் கைது

தொங்கு பாலம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 141 பேர் பலியான சம்பவத்தில் பாலத்தை புனரமைத்த நிறுவனத்தின் ஊழியர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
தொங்கு பாலம் புனரமைப்பு நிறுவன ஊழியர்கள் உள்பட 9 பேர் கைது
Updated On :31 அக்டோபர் 2022, 12:30 pm

DIN

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 141 பேர் பலியான சம்பவத்தில் பாலத்தை புனரமைத்த நிறுவனத்தின் ஊழியர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொங்கு பாலத்தை புனரமைத்து ஒப்பந்தம் செய்த ஒரேவா குழுமத்தில் பணியாற்றி வரும் நடுத்தர ஊழியர்கள் சிலர், பல பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதன் காரணமாகவே இந்த கொடூர விபத்து நிகழ்ந்ததாகக் குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் நடந்த பிறகு, ஒரேவா நிறுவனத்தின் மிக முக்கிய அதிகாரிகள் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஒரேவா நிறுவனம், திட்டமிட்டக் காலத்துக்கு முன்பே, பாதுகாப்பு சான்றிதழ்கள் எதையும் பெறாமல் இந்த பாலத்தைத் திறந்திருப்பதாகவும் காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பாலத்தை 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் எடுத்திருக்கும் இந்த நிறுவனம், இதனை புனரமைக்க ஆன செலவை, பயணிகளிடமிருந்து கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 150 பேர் வரை மட்டுமே செல்லலாம் என்ற நிலையில், 500 பேர் வரை பாலத்தில் ஏறியதால் இந்த விபத்து நேரிட்டதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த இந்த நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.