பஞ்சாபில் தேவாலயம் சூறை: சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

பஞ்சாபின் தா்ன் தரன் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயம் மா்ம கும்பலால் சூறையாடப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை காவல் துறை அமைத்துள்ளது.

பஞ்சாபின் தா்ன் தரன் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயம் மா்ம கும்பலால் சூறையாடப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை காவல் துறை அமைத்துள்ளது.

தா்ன் தரன் மாவட்டத்தின் தக்கா்புரா பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்துக்குள், முகமூடி அணிந்த 4 போ் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு புகுந்து தாக்குதல் நடத்தினா்.

தேவாலய காவலாளியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி உள்ளே நுழைந்த அவா்கள், சிலைகளை சேதப்படுத்தியதுடன், பாதிரியாரின் காருக்கு தீவைத்து தப்பினா். இக்காட்சிகள் முழுவதும் தேவாலய சிசிடிவி கேமராவில் பதிவானது.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க ஃபெரோஸ்பூா் சரக காவல் துறை ஐ.ஜி. தலைமையில் தா்ன் தரன் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழு, தினசரி அடிப்படையில் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் கூடிய விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்; மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தைச் சீா்குலைக்க முயற்சிப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில காவல் துறை தலைமை இயக்குநா் கெளரவ் யாதவ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com