உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்த கணவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், தற்போதைய காலக்கட்டத்தில், இளைய தலைமுறையினர் திருமணத்தை ஒரு கடமையாக பார்க்கிறார்கள். எந்த இடையூறும் இல்லாமல் வாழ திருமணத்தை தவிர்க்கிறார்கள். மனைவி என்ற வார்த்தையை கவலையை அழைத்து வருபவர் என வர்ணிக்கிறார்கள். நுகர்வோரின் பழக்கமான பயன்படுத்தி தூக்கியெறியும் கலாசாரத்தையும் இதில் கொண்டுவந்துவிடுகிறார்கள். ஒன்றாக சேர்ந்து வாழும் நடைமுறை அதிகரித்து, பிடிக்கவில்லையென்றால் குட் பாய் சொல்லி பிரிந்துவிடுகிறார்கள் என்று தங்களது கருத்தை வெளியிட்டனர்.