ஒடிசா மாநிலத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே பெருமை சேர்த்தவர் கமலா பூஜாரி. அவர் எங்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னோடி. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவரை இவ்வாறு கட்டாயப்படுத்தி நடனமாட வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது, அதற்கு நாங்கள் கடுமையாக கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். இதுகுறித்து விசாரணை நடத்தி, சமூக ஆர்வலர் மீதுநடவடிக்கை எடுக்க மாநிலஅரசை வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் அனைத்துப் பழங்குடியின மக்களும் சாலையில் அமர்ந்து போராடுவோம் என்று புமியா அமைப்பின் தலைவர் நரேந்திர கண்டோலியா கூறியுள்ளார்.