ரயில்வே தொடர்பில் தற்போதிருக்கும் 12 ரயில் மண்டலங்களில் இந்த ரயில்கள் அனைத்தும் ஒரு மண்டலமாக இருக்கும். இந்த அனைத்து ரயில்களும் குறைந்தபட்சம் 384 மீட்டர் அதாவது கிட்டத்தட்ட 16 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். இந்த ரயில்களை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம்தான், நிதி, கொள்முதல், ரயில்களை இயக்குதல் மற்றும் ரயில்களை பராமரித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும்.
இந்திய ரயில்வே மற்றும் தனியார் நிறுவனங்களின் நலன்கள் இரண்டையுமே சமநிலைப்படுத்தும் வகையில்தான் இந்த திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தனியார் ரயில்களை இயக்குவதன் மூலம், இந்திய ரயில்வேயும் தனது உள்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்ள இயலும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.