மகாராஷ்டிரத்தில் வெவ்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வின்போது நேர்ந்த விபரீதத்தில் 20 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: “ கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கிய விநாயகர் சதுர்த்தி கொண்டட்டம் நேற்று வரை நீடித்தது. இந்த விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்வில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிக்க: துலீப் கோப்பை: 193 ரன்கள் எடுத்த இளம் வீரர்
வார்தா மாவட்டத்தில் சவாங்கி பகுதியில் விநாயகர் சிலையினை கரைக்க முயன்ற 3 பேர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தனர். அதேபோல தெல்வி பகுதியில் ஒருவர் உயிரிழந்தார். யவாத்மால் மாவட்டத்தில் குளத்தில் சிலையினை கரைக்க முயன்ற 2 பேர் உயிரிழந்தனர். அகமது நகர் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் சிலைகளை கரைக்க முயன்ற இருவர் உயிரிழந்தனர். அதேபோல விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.” என்றனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகளை கரைக்க முயன்ற 20 பேர் இதுவரை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 10,000 போலீஸில் ஒப்படைப்பு

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

