புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மகாராஷ்டிரத்தில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 6:18 am

DIN

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 

வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் நகரின் சக்கர்தாரா பகுதியில் இந்த விபத்து நடைபெற்றது. கார் ஓட்டுநர் கணேஷ் ஆதவ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

ஆதவ் காரை அதிவேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது மேம்பாலத்தில் எதிரே வந்த மூன்று இருசக்கர வானத்தின் மீது கார் மோதியது என்று சக்கர்தாரா காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

இந்த விபத்தில் இருசக்கர வாகனம் ஒன்றில் சென்றுகொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மேம்பாலத்தில் இருந்து கீழே சாலையில் விழுந்தனர்.

அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இறந்தவர்கள் வினோத் கபேகர் (45), அவரது தாயார் லக்ஷ்மி பாய் (65), அவரது 5 மற்றும் 11 வயதுடைய இரண்டு மகன்கள் என அடையாளம் காணப்பட்டதாகவும், மேலும் இருவர் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.