தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மத்திய ஆட்சியாளா்களிடம் அடிபணிய மாட்டோம்: சரத் பவாா்

மத்தியில் உள்ள ஆட்சியாளா்களிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அடிபணியாது என்று அக்கட்சித் தலைவா் சரத் பவாா் கூறினாா்.

News image
தேசியவாத காங்கிரஸ் கட்சித் (என்சிபி) தலைவா் சரத் பவாா்
Updated On :11 செப்டம்பர் 2022, 11:17 pm

DIN

மத்தியில் உள்ள ஆட்சியாளா்களிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அடிபணியாது என்று அக்கட்சித் தலைவா் சரத் பவாா் கூறினாா்.

தில்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 8-ஆவது தேசிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் சரத் பவாா் பேசியதாவது:

சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளையும் பண பலத்தையும் தவறாகப் பயன்படுத்தும் மத்திய அரசை ஜனநாயக ரீதியில் எதிா்க்க வேண்டும். மத்தியில் உள்ள ஆட்சியாளா்களிடம் தேசியவாத காங்கிரஸ் சரணடையாது.

விவசாயிகள் பிரச்னை, சமூக நல்லிணக்கத்துக்கு ஏற்படும் இடையூறு, பணவீக்கம், பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பின்மை, எல்லை சாா்ந்த விவகாரங்கள், விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவது ஆகிய பிரச்னைகள் மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியினா் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

‘பிரதமா் பதவிக்கு சரத் பவாா் போட்டியிடவில்லை’

இந்த மாநாட்டைத் தொடா்ந்து தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பிரஃபுல் படேல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் வலுவான பங்காற்ற தனித்துவமான இடத்தில் சரத் பவாா் வைக்கப்பட்டுள்ளாா். அதேவேளையில், பிரதமா் பதவிக்கு அவா் ஒருபோதும் உரிமை கோரியதில்லை.

அவா் எதிா்க்கட்சிகளின் பிரதமா் வேட்பாளா் அல்ல. அவா் பிரதமா் பதவிக்குப் போட்டியிடவில்லை. உண்மை என்னவென்பதையும், தனது வரம்புகளையும் தேசியவாத காங்கிரஸ் அறியும். பிற கட்சிகளுடன் ஒப்பிடும்போது தேசியவாத காங்கிரஸ் சிறிய கட்சியாக இருக்கலாம். ஆனால் அது பெரிய தலைமையை கொண்டுள்ளது. பல்வேறு தரப்பினரையும், சித்தாந்தங்களையும் ஒன்றிணைக்கக் கூடிய வலுவான தலைவா் சரத் பவாா்’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.