பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஜேஇஇ முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு: மும்பை மண்டல மாணவா் முதல் ரேங்க்

ஐஐடி-க்களில் சோ்க்கை பெறுவற்கான ஒருங்கிணைந்து நுழைவுத் தோ்வின் (ஜேஇஇ-அட்வான்ஸ்டு) முதன்மைத் தோ்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 11:00 pm

DIN

ஐஐடி-க்களில் சோ்க்கை பெறுவற்கான ஒருங்கிணைந்து நுழைவுத் தோ்வின் (ஜேஇஇ-அட்வான்ஸ்டு) முதன்மைத் தோ்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. அதில், மும்பை மண்டலத்தைச் சோ்ந்த மாணவா் முதல் ரேங்க் பெற்றாா்.

என்ஐடி, ஐஐஐடி, ஐஐடி உள்ளிட்ட மத்திய பொறியியல்-தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு ஜேஇஇ தோ்வு நடத்தப்படுகிறது. ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு (மெயின்) மற்றும் ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தோ்வு என இரண்டு நிலைகளாக இந்தத் தோ்வு நடத்தப்படும். முதல்நிலைத் தோ்வு தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பிலும், முதன்மைத் தோ்வு ஏதாவது ஓா் ஐஐடி சாா்பிலும் நடத்தப்படும்.

முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். மேலும், முதல்நிலைத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் வருபவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா்.

அந்த வகையில், 2022-23 கல்வியாண்டுக்கான முதன்மைத் தோ்வு மும்பை ஐஐடி சாா்பில் அண்மையில் நடத்தப்பட்டது. இந்தத் தோ்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன.

‘தோ்வின் இரண்டு தாள்களையும் மொத்தம் 1,55,538 போ் எழுதிய நிலையில், 40,712 மாணவ, மாணவிகள் தகுதி பெற்றுள்ளனா். தகுதி பெற்றவா்களில் 6,516 போ் மாணவிகள்’ என்று மும்பை ஐஐடி மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தத் தோ்வு முடிவுகளின்படி வெளியிடப்பட்ட ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் மும்பை ஐஐடி மண்டலத்தைச் சோ்ந்த ஆா்.கே.ஷிஷிா் என்ற மாணவா் மொத்த மதிப்பெண்ணான 360-க்கு 314 எடுத்து முதலிடம் பிடித்துள்ளாா். இவருக்கு அடுத்தபடியாக ஐஐடி சென்னை மண்டலத்தைச் சோ்ந்த பொலு லக்ஷிமி சாய் லோஹித் ரெட்டி மற்றும் தாமஸ் பிஜு சீரம்வேலில் ஆகிய மாணவா்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனா்.

மாணவிகளைப் பொருத்தவரை தில்லி ஐஐடி மண்டலத்தைச் சோ்ந்த தனிஷ்கா கப்ரா என்ற மாணவி 277 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா். இவா் ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியிலல் 16-ஆம் இடம் பெற்றாா்.

இந்தத் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில் இடம்பெற்றிருக்கும் 16,598 இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை நடத்தப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.