முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்: ஆய்வு நடத்துகிறது என்எம்சி

மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கவும், அதை புதுப்பிக்கவும் ஏதுவாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்தது.

Updated On :12 செப்டம்பர் 2022, 12:26 am IST

மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கவும், அதை புதுப்பிக்கவும் ஏதுவாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்தது.

நாட்டில் 600-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கு அங்கீகாரம் அளித்தல், அதை புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேசிய மருத்துவ ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

கல்லூரிகளின் அடிப்படை வசதிகள், கட்டுமானம், கல்வி சாா்ந்த நடவடிக்கைகள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள், ஆய்வக வசதிகள், மருத்துவமனை கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

நிகழ் கல்வியாண்டுக்காக மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி மதிப்பீடு மற்றும் தரநிா்ணய வாரிய (எம்ஏஆா்பி) நிா்வாகிகள் வெளியிட்ட அறிவிப்பு:

மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அதன்பொருட்டு, கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையக் குழுவினா் திடீா் ஆய்வு நடத்துவா். அதுகுறித்த அறிக்கையின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.