டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

800 ஆண்டுகள் பழமையான மரத்தை பாதுகாக்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு

தெலங்கானாவில் 800 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. சந்தோஷ் குமார் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

News image
எம்.பி. சந்தோஷ் குமாருடன், அமைச்சர் ஸ்ரீனிவாஸ்.
Updated On :1 பிப்ரவரி 2024, 10:18 am

DIN

தெலங்கானாவில் 800 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. சந்தோஷ் குமார் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

மஹ்பூப்நகர் மாவட்டத்தில் பில்லாலமரி என்ற 800 ஆண்டுகள் பழமையான பில்லமரி என்ற ஆலமரம் உள்ளது. ஆசியாவின் இரண்டாவது பெரிய ஆலமரம் இது. 3.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள மரத்தின் கிளை கரையான் தாக்குதலால் கடந்த 2017ஆம் ஆண்டு முறிந்து விழுந்தது. அதன்பிறகு, மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் மீண்டும் மரம் செழிப்பாக வளர்ந்துள்ளது.

இந்நிலையில், ரூ. 30 லட்சம் மதிப்பில் பில்லமரி சந்திப்பு திட்டத்தை தெலங்கானா சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் மற்றும் எம்.பி. சந்தோஷ் குமார் ஆகியோர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற சந்தோஷ் குமார், தனது நாடாளுமன்ற நிதியிலிருந்து மரத்தை பாதுகாக்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

“இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மரத்தைப் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு. அழியும் தருவாயில் இருந்த மரம் தற்போது செழிப்பாக வளர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மரத்தை பாதுகாத்து வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மரத்தை தனது குழந்தைபோல் பார்த்துக் கொள்ளும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஸ்ரீனிவாஸுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.”

Story image

இதையடுத்து, எம்.பி. சந்தோஷ் குமாரும், அமைச்சர் ஸ்ரீனிவாஸும் மரத்துடன் சுயப்படம் எடுத்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.