பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அரசு பங்களாவைக் காலி செய்ய சுப்ரமணியன் சுவாமிக்கு கால அவகாசம்

அரசு பங்களாவைக் காலி செய்ய, பாஜக தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரிமணியன் சுவாமிக்கு தில்லி உயர் நீதிமன்றம் 6 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

News image

அரசு பங்களாவைக் காலி செய்ய சுப்ரமணியன் சுவாமிக்கு கால அவகாசம்

Updated On :14 செப்டம்பர் 2022, 12:41 pm


புது தில்லி: அரசு பங்களாவைக் காலி செய்ய, பாஜக தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரிமணியன் சுவாமிக்கு தில்லி உயர் நீதிமன்றம் 6 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, மத்திய அரசின் அரசு பங்களா ஒன்று ஐந்து ஆண்டு காலத்துக்கு சுப்ரமணியன் சுவாமிக்கு ஒதுக்கப்பட்டது.பிறகு அவர் மாநிலங்களவை உறுப்பினரானதும், அதே பங்களாவில் தங்கியிருந்தார்.

அவரது பதவிக் காலம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவுபெற்றாலும், பாதுகாப்புக் கருதி, அவருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்ட அந்த ஐந்து ஆண்டுக் காலம் இன்னும் நிறைவடையாததால், மற்றொரு அரசு பங்களா ஒதுக்குமாறு கோரியிருந்தார்.

அவரது மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், அரசு பங்களாவை காலி செய்ய 6 வார கால அவகாசம் வழங்கியும், தில்லியில் அவருக்குச் சொந்தமாக இருக்கும் இடத்துக்கு சுப்ரமணியன் சுவாமியை குடிபெயருமாறு அறிவுறுத்தி, அந்த பங்களாவில், இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்ற உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.