பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

'அபாய கட்டத்தில் ஜனநாயகம்’: சீதாராம் யெச்சூரி கருத்து

நாட்டில் பாஜக தலைமையிலான ஆட்சியின்கீழ் ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் அபாயக் கட்டத்தில் உள்ளதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 

News image
சீதாராம் யெச்சூரி
Updated On :14 செப்டம்பர் 2022, 10:18 am

DIN

நாட்டில் பாஜக தலைமையிலான ஆட்சியின்கீழ் ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் அபாயக் கட்டத்தில் உள்ளதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 

பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக விமர்சனம் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி புதன்கிழமை பேசும்போது, நாட்டில் ஜனநாயகமும், மதச்சார்பின்மையும்  அபாயக் கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றால் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

“பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என விரும்பும் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்” எனத் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.