சிறுநீரகம் தானம் பெற்ற 5 வயது சிறுவன் பெற்றோருடன்
சிறுநீரகம் தானம் பெற்ற 5 வயது சிறுவன் பெற்றோருடன்

உடல் உறுப்புகளை தானமளிக்கவே பிறந்த குழந்தையாம்: மருத்துவர்கள் வேதனை

நாம் வாழும் வாழ்வே மிகச் சிறியது. அதிலும் ஒரு சிறிய குழந்தையின் வாழ்க்கை மகத்தான உடல் உறுப்பு தானத்தில் நிறைவு பெற்றுள்ளது.
Published on


புது தில்லி: நாம் வாழும் வாழ்வே மிகச் சிறியது. அதிலும் ஒரு சிறிய குழந்தையின் வாழ்க்கை மகத்தான உடல் உறுப்பு தானத்தில் நிறைவு பெற்றுள்ளது.

வெறும் 16 மாதங்களே ஆன சிறுவன் தலையில் காயத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மீண்டு வரவில்லை. அவரால், இரண்டு குழந்தைகள் புதுவாழ்வு பெற்று மருத்துவமனையிலிருந்து மீண்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி ஒன்றரை வயது சிறுவன் மருத்துவமனையில் தலைக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 25ஆம் தேதி அவர் மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, அந்தக் குழந்தையின் உடல் உறுப்புகளை தானமளிக்க அவரது பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து, சிறுவனின் சிறுநீரகமும், கல்லீரலும் தானமாகப் பெறப்பட்டு, அன்றைய தினமே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டது.

அதோடு, குழந்தையின் இருதய வால்வுகள் மற்றும் கருவிழிகள் உடல் உறுப்பு பாதுகாப்பு வங்கியில் சேமிக்கப்படுள்ளது.

சிறுநீரகம் 5 வயது சிறுவனுக்குப் பொருத்தப்பட்டது. இந்தியாவிலேயே சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்ட மிக இளம் வயது நோயாளியாக இவர் இருக்கிறார். இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பொருத்தப்பட்டன.

இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் மஞ்சுநாத் கூறுகையில், குழந்தைகளுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகவும் கடினம். அவர்து நரம்புகள் மிகவும் அடர்த்தியாகவும், குறுகியதாகவும் இருக்கும். அதில் ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டாலும் மீண்டும் சரி செய்ய டியாது. அதோடு, தானம் பெற்றது ஒரு குழந்தையுடயது என்பதால் அந்த சிறுநீரகப் பை முற்றிலும் வளர்ச்சியடையாததாக இருந்தது. சிகிச்சையின்போது கொஞ்சம் பதற்றப்பட்டாலும் நிலைமை மோசமடைந்துவிடும் நிலையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம் என்கிறார்.

உடல் உறுப்புகளைப் பெற்ற சிறார்கள் நன்கு விரைவாக குணமடைந்து வருகிறார்கள். மீண்டும் அவர்கள் பள்ளிக்குச் செல்லவிருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று கூறுகிறார் டாக்டர் சந்தீப் அகர்வால்.

உடல் உறுப்புகளை தானமளித்த குழந்தை சுமார் 8 நாள்கள் உயிருக்குப் போராடினான். அவர் உடல் உறுப்புகளை தானமளிக்கவே பிறந்தவர் என்று கூறி நெகிழ்கிறார் மருத்துவர் தீபக் குப்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com