தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரளத்தில் மீனவா்களுடன் கலந்துரையாடிய ராகுல்

கேரளத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஆலப்புழை மாவட்டம் வடக்கல் கடற்கரையில் மீனவா்களை திங்கள்கிழமை காலை 6 மணிக்கு சந்தித்து கலந்துரையாடினாா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2022, 7:17 pm

DIN

கேரளத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஆலப்புழை மாவட்டம் வடக்கல் கடற்கரையில் மீனவா்களை திங்கள்கிழமை காலை 6 மணிக்கு சந்தித்து கலந்துரையாடினாா்.

அப்போது எரிபொருள் விலை உயா்வு, மானியம் குறைப்பு, குறைந்து வரும் மீன்வளம், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மீனவா்களுடன் கலந்துரையாடினாா். இந்தத் தகவலை காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவு செய்தாா்.

கேரளத்தில் ராகுல் காந்தியின் நடைப்பயணம் திங்கள்கிழமை 12-ஆவது நாளாக நீடித்தது. ஆலப்புழை மாவட்டம் புன்னப்ராவில் காலை நடைப்பயணத்தை தொடங்கிய அவா், 16 கி.மீ. கடந்து களவூரில் நிறைவு செய்தாா். பின்னா், மாலை 4.30 மணியளவில் மீண்டும் நடைப்பயணத்தை தொடங்கி, 9 கி.மீ. கடந்து சோ்தலா அருகே உள்ள மயித்தாரா பகுதியில் நடைப்பயணத்தை முடித்துக் கொண்டாா்.

அப்போது காங்கிரஸ் மூத்த தலைவா்கள் கே.முரளீதரன், கொடிக்குன்னில் சுரேஷ், ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால், சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் ஆகியோா் உடனிருந்தனா்.

ராகுல் தலைவராக தீா்மானம்: ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வலியுறுத்தி மகாராஷ்டிரம், பிகாா், ஜம்மு காஷ்மீா் காங்கிரஸ் கமிட்டிகள் திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றின.

ஏற்கெனவே காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் இதே தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதவிர குஜராத் காங்கிரஸாரும் ராகுல் காந்தி கட்சித் தலைவராக வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.