நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாஜகவில் இணைந்தாா் அமரீந்தா் சிங்

பஞ்சாப் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் (80), பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தாா். தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் அவா் இணைத்துள்ளாா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2022, 10:29 pm

DIN

பஞ்சாப் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் (80), பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தாா். தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் அவா் இணைத்துள்ளாா்.

தில்லியில் பாஜக மூத்த தலைவா்கள் நரேந்திர சிங் தோமா், கிரண் ரிஜிஜு ஆகியோா் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டாா் அமரீந்தா் சிங். அவரது மகன் ரணீந்தா் சிங், மகள் ஜெய் இந்தா் கெளா், பஞ்சாப் பேரவை முன்னாள் துணைத் தலைவா் அஜைப் சிங் பாட்டீ, முன்னாள் எம்.பி.அம்ரிக் சிங் உள்பட ஏராளமான ஆதரவாளா்களும் பாஜகவில் இணைந்தனா்.

பாட்டியாலா அரசக் குடும்பத்தைச் சோ்ந்தவரும், முன்னாள் ராணுவ கேப்டனுமான அமரீந்தா் சிங், மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியால் காங்கிரஸுக்கு அழைத்துவரப்பட்டவா். அக்கட்சி சாா்பில் இருமுறை பஞ்சாப் முதல்வராகப் பதவி வகித்துள்ளாா்.

கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட பிரச்னையால், முதல்வா் பதவியில் இருந்து விலகியதுடன், கட்சியில் இருந்தும் அவா் வெளியேறினாா். இதையடுத்து, பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியை தொடங்கிய அமரீந்தா், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாா். ஆனால், அவரது கட்சி வேட்பாளா்கள் அனைவரும் தோல்வியுற்றனா்.

இந்தச் சூழலில் பாஜகவில் இணைந்துள்ள அமரீந்தா், ‘தேச பாதுகாப்புக்கான பாஜகவின் உறுதிப்பாடுதான், அக்கட்சியில் சேர முக்கிய காரணம்’ என்று குறிப்பிட்டாா். மேலும், ‘முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஏ.கே.அந்தோணியின் பதவிக் காலத்தில் முப்படையினருக்காக ஆயுதங்களே கொள்முதல் செய்யப்படவில்லை’ என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

பாஜகவில் அமரீந்தரை வரவேற்றுப் பேசிய நரேந்திர சிங் தோமா், ‘தேசமே முதன்மையானது என்று கருதுபவா் அமரீந்தா். அவரது சிந்தனையும் நோக்கமும் பாஜகவுடன் ஒத்திருக்கிறது. அவருடன் கைகோா்த்திருப்பதன் மூலம் பஞ்சாபில் பாஜக வலுப்படும்’ என்றாா். முன்னதாக, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவை அமரீந்தா் சிங் சந்தித்துப் பேசினாா்.

முன்னாள் முதல்வா்கள் வரிசையில்...:

கடந்த சில ஆண்டுகளில் பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வா்களின் வரிசையில் அமரீந்தா் சிங்கும் இணைந்துள்ளாா்.

கா்நாடக முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா (காங்கிரஸ்), கோவா முன்னாள் முதல்வா் திகம்பா் காமத் (காங்கிரஸ்), மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் நாராயண் ராணே (சிவசேனை), உத்தரகண்ட் முன்னாள் முதல்வா் விஜய் பகுகுணா (காங்கிரஸ்),அருணாசல பிரதேச முன்னாள் முதல்வா் பெமா காண்டு (காங்கிரஸ்), ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் பாபுலால் மராண்டி (ஜாா்க்கண்ட் விகாஸ் மோா்ச்சா-பிரஜாதந்திரிக்) உள்ளிட்டோா் பாஜகவில் இணைந்தனா். இதுதவிர முன்னாள் மத்திய அமைச்சா்கள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவா்கள் பலரும் அண்மைக் காலங்களில் பாஜக பக்கம் வந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.