தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தில்லியில் அமலாக்கத்துறை முன்பு காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ஆஜர்!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் திங்கள்கிழமை அமலாக்க இயக்குனரகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். 

News image
Updated On :19 செப்டம்பர் 2022, 8:03 am

DIN

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் திங்கள்கிழமை அமலாக்க இயக்குனரகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். 

60 வயதான காங்கிரஸ் தலைவர் மதியம் 12 மணியளவில் ஏபிஜே அப்துல் கலாம் சாலையில் உள்ள பெடரல் ஏஜென்சியின் அலுவலகத்தை அடைந்த அவர், பாஸைப் பெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தார். 

சிவகுமாருக்கு அமலாக்கத்துறை கடந்த வாரம் சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை முன்பு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட வழக்கு குறித்து தனக்குத் தெரியாது என்று காங்கிரஸ் தலைவர் கூறினார். இதையடுத்து, மீண்டும் ஆஜராகும்படி அமலாக்கத்துறையிடம் இருந்து எனக்கு சம்மன் வந்தது. 

விசாரணைக்கு ஒத்துழைக்க நான் தயாராக உள்ளேன். ஆனால் இந்த அழைப்பின் நேரமும், எனக்கு அளிக்கப்படும் துன்புறுத்தல்களும் எனது அரசியலமைப்பு மற்றும் அரசியல் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்கின்றன என்று சிவகுமார் ட்வீட் செய்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.