பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற மருத்துவர்: வைரலாகும் விடியோ

தெரு நாயை காரில் கட்டி மருத்துவர் ஒருவர் இழுத்துச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2022, 11:51 am IST

தெரு நாயை காரில் கட்டி மருத்துவர் ஒருவர் இழுத்துச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் ரஜ்னீஷ் கால்வா என்ற பிரபல மருத்துவர், தனது காரில் நாயை கட்டி சாலையில் இழுத்துச் சென்றுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சாலையில் சென்ற மக்கள், காரை நிறுத்தி நாயை மீட்டனர். காயமடைந்த நாயை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விலங்குகள் நல அறக்கட்டளை அளித்த புகாரின் அடிப்படையில், மருத்துவர் மீது மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ரஜ்னீஷ் கால்வா கூறுகையில், தனது வீட்டின் அருகே இருந்த தெரு நாயை அப்புறப்படுத்தும் முயற்சியில்தான் இதுபோன்று செய்ததாக கூறியுள்ளார்.

பிரதான சாலையில் நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அவ்வழியே சென்ற மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.