விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாலத்தில் இருந்த 4,000 நட்டு, போல்டுகள் காணவில்லை

ஹரியாணாவில் பாலத்தில் இருந்த 4,000 நட்டு, போல்டுகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2022, 10:33 am

ஹரியாணாவில் பாலத்தில் இருந்த 4,000 நட்டு, போல்டுகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம், சகாரன்பூர் - பஞ்ச்குலா தேசிய நெடுஞ்சாலை 344-ல் யமுனா நகர் அருகே கட்டப்பட்டுள்ள பாலத்தை நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஆய்வு செய்துள்ளார்.

அப்போது பாலத்தில் இருந்த 4,000 நட்டு, போல்டுகள் காணாமல் போனதை கண்டு பொறியாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இருப்பினும், இந்த திருட்டு சம்பவம் குறித்து நெடுஞ்சாலைத் துறை சார்பில் இதுவரை எந்த புகாரும் காவல்துறையில் அளிக்கவில்லை என்று சதார் காவல்துறை அதிகாரி தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பாலம் வலுவாக இருக்க போடப்பட்டிருக்கும் நட்டு, போல்டுகள் காணாமல் போன சம்பவம் அப்பகுதி மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.