மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாலத்தில் இருந்த 4,000 நட்டு, போல்டுகள் காணவில்லை

ஹரியாணாவில் பாலத்தில் இருந்த 4,000 நட்டு, போல்டுகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2022, 10:33 am

DIN

ஹரியாணாவில் பாலத்தில் இருந்த 4,000 நட்டு, போல்டுகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம், சகாரன்பூர் - பஞ்ச்குலா தேசிய நெடுஞ்சாலை 344-ல் யமுனா நகர் அருகே கட்டப்பட்டுள்ள பாலத்தை நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஆய்வு செய்துள்ளார்.

அப்போது பாலத்தில் இருந்த 4,000 நட்டு, போல்டுகள் காணாமல் போனதை கண்டு பொறியாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இருப்பினும், இந்த திருட்டு சம்பவம் குறித்து நெடுஞ்சாலைத் துறை சார்பில் இதுவரை எந்த புகாரும் காவல்துறையில் அளிக்கவில்லை என்று சதார் காவல்துறை அதிகாரி தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பாலம் வலுவாக இருக்க போடப்பட்டிருக்கும் நட்டு, போல்டுகள் காணாமல் போன சம்பவம் அப்பகுதி மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.