குஜராத்திற்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வந்தபோது, பாஜக ஆதரவாளர்கள் மோடி மோடி என்று முழக்கமிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்த்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் நேரடியாக போட்டியிடவுள்ளது.
தில்லியை தொடர்ந்து பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் கால் பதிக்கும் முனைப்பில் குஜராத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத்தில் பல கட்டங்களாக பிரசாரத்தை மேற்கொண்டுள்ள கேஜரிவால், வதோதராவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று வதோதரா விமான நிலையம் வந்தார்.
அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் மோடி மோடி என முழக்கமிட்டதை தொடர்ந்து, ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் கேஜரிவால் கேஜரிவால் என பதிலுக்கு முழக்கமிட்டதால், விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
தொடர்ந்து, சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்த கேஜரிவால், செய்தியாளர்களின் கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பின்போது பதிலளிப்பதாக கூறி புறப்பட்டு சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


