தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

பெங்களூரு மருத்துவமனை அருகே காய்கறி விற்பவர்கள் பலியான சம்பவம் குறித்து...

kharge

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - கோப்புப் படம்

Published On :30 ஏப்ரல் 2026, 1:59 pm IST

பெங்களூரில் பௌரிங் மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் மருத்துவமனை வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து கார்கே பேசியதாவது, "அது ஒரு பழைய வளாகம். அதுமட்டுமின்றி, அந்த வளாகத்தின் சுவர் சரியாகக் கட்டப்படவில்லை.

சில இடங்களில் மண் சுவரும், சில இடங்களில் செங்கற்களாலான சுவர் இருப்பதையும் கண்டேன். அந்த வளாகத்தைச் சரிசெய்ய வேண்டும் என நான் அங்கு பேசியிருக்கிறேன்.

வளாகத்துக்கு அருகில் அமர்ந்து காய்கறி விற்றவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

இடிந்து விழுந்த மருத்துவமனை சுற்றுச் சுவர்

இடிந்து விழுந்த மருத்துவமனை சுற்றுச் சுவர் - PTI

வரும் காலங்களில் காய்கறி விற்பவர்கள், வளாகத்தைத் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. இன்று என்ன நடந்தது என்று பார்த்தீர்களா? இன்று பெங்களூரில் நடந்தது, நாளை வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஆகையால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, சிறு வணிகர்களுக்கு முடிந்தவரையில் உதவ வேண்டும்" என்று தெரிவித்தார்.

பெங்களூரில் புதன்கிழமைய்ல் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஓரிரு மணிநேரம் மட்டுமே நீடித்த பலத்த காற்று மற்றும் கனமழையால் பெங்களூரின் சாலைகள் சேறும் சகதியுமாக மாறின.

இந்த நிலையில், கனமழையின்போது சிவாஜிநகரில் பௌரிங் மருத்துவமனையின் 8 அடி உயர சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில், சுவரை ஒட்டிய நடைபாதையில் இருந்த வியாபாரிகள் உள்பட மக்கள் மீது சுவர் விழுந்தது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மாநில முதல்வர் சித்தராமையா ரூ. 5 லட்சமும், பிரதமர் மோடி ரூ. 2 லட்சமும் நிவாரண உதவி அறிவித்தனர்.

Summary

Bowring Hospital Wall Collapse in Bengaluru: The government should take precaution and help these gig workers or small traders, says Congress President Mallikarjun Kharge

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.