தமிழகத்தில் தற்போது சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளது. அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் தடையின்றி கிடைக்கிறது. அதனால், மாணவா்கள், இளைஞா்கள் சீரழிந்து வருவது குறித்து அமைச்சா் அமித் ஷாவிடம் எடுத்துக் கூறினோம். இது குறித்து ஏற்கெனவே பலமுறை சட்டபேரவையில் தற்போதைய முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். கட்சி ரீதியாகவும் அறிக்கை வெளியிட்டும், அது குறித்து எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. அரசின் அலட்சியத்தால், தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை பெருவாரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியதால், மத்திய உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றாா் அவா்.