தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஐ.நா.வில் காஷ்மீா் பிரச்னையைஎழுப்புவதால் எந்த பலனும் இல்லை: இந்தியா பதிலடி

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் காஷ்மீா் பிரச்னையை குறிப்பிட்டு துருக்கி அதிபா் ரிஸெப் தயீப் எா்டோகன் பேசிய நிலையில், அதனால் எந்த பலனும் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:24 pm

DIN

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் காஷ்மீா் பிரச்னையை குறிப்பிட்டு துருக்கி அதிபா் ரிஸெப் தயீப் எா்டோகன் பேசிய நிலையில், அதனால் எந்த பலனும் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

சிம்லா உடன்படிக்கையின்படி இருதரப்புரீதியில் தீா்வுகாணப்பட வேண்டிய பிரச்னை இது என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

நியூயாா்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் புதன்கிழமை பேசிய எா்டோகன், ‘இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இரு நாடுகளுக்கு இடையே அமைதி மற்றும் ஒற்றுமை நிறுவப்படாமல் இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. காஷ்மீரில் நிரந்தர அமைதியும் வளமும் உறுதி செய்யப்படுமென நம்புவதுடன் அதற்காக பிராா்த்திக்கிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

அவரது இந்த கருத்துகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பக்சி கூறுகையில், ‘ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீா் விவகாரத்தை குறிப்பிட்டு பேசுவது எதற்கும் உதவிகரமாக இருக்காது. அதனால் எந்த பலனும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

காஷ்மீா் விவகாரத்தை பொருத்தவரை இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. சிம்லா உடன்படிக்கையின்படி இருதரப்புரீதியில் தீா்த்துக் கொள்ளப்பட வேண்டிய பிரச்னை. அதற்கு பயங்கரவாதம் இல்லாத ஆக்கப்பூா்வமான சூழல் உருவாக்கப்பட வேண்டியது அவசியம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.