தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

விமானப் படை கல்லூரி மாணவர் கொலை: 6 ஊழியர்கள் கைது

விமானப் படை தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த 27 வயது மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கல்லூரியின் ஆறு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

விமானப் படை கல்லூரி மாணவர் கொலை: 6 ஊழியர்கள் கைது

Updated On :24 செப்டம்பர் 2022, 11:51 am

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஜலாஹள்ளி பகுதியில் இயங்கி வரும் விமானப் படை தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த 27 வயது மாணவர் மரண வழக்கில், கல்லூரியின் ஆறு ஊழியர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை கல்லூரி விடுதி வளாகத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அங்கித் குமார் ஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரும் ஏர் கமாண்டர், குரூப் காப்டன் மற்றும் விங் கமாண்டர் பொறுப்புகளில் இருப்பவர்கள்.

பலியான அங்கித் குமாரின் சகோதரர் அமன் ஜா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொல்லப்பட்டவர் கைப்பட எழுதிய ஏழு பக்க தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதில், கைது செய்யப்பட்ட ஆறு குற்றவாளிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

அங்கித்துக்கு எதிராக பயிற்சி அதிகாரி உள்பட சிலர் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அங்கித் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்கொலையாக இருந்தாலும், கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து பெற்றோருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக செல்லிடப்பேசி அழைப்புகளை அங்கித் எடுக்காததால், குடும்பத்தினர் கல்லூரி விடுதிக்கு வந்து பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கித் தனது கைப்பட எழுதிய தற்கொலைக் கடிதத்தில், குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரும் தன்னை எந்த வகையில் எல்லாம் துன்புறுத்தினார்கள், மன உளைச்சலுக்கு ஆளாக்கினர் என்பதை தெள்ளத் தெளிவாக எழுதியிருப்பதாகவும் இளைஞரின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது சகோதரனுக்கு அனுப்பிய குறுந்தகவலில் ஏதேதோ ஆவணங்களைக் காட்டி அதில் கையெழுத்திடச் சொல்கிறார்கள் என்று அனுப்பியிருந்ததையும் காவல்துறையினர் கவனத்தில் எடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.