பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஜலாஹள்ளி பகுதியில் இயங்கி வரும் விமானப் படை தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த 27 வயது மாணவர் மரண வழக்கில், கல்லூரியின் ஆறு ஊழியர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை கல்லூரி விடுதி வளாகத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அங்கித் குமார் ஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரும் ஏர் கமாண்டர், குரூப் காப்டன் மற்றும் விங் கமாண்டர் பொறுப்புகளில் இருப்பவர்கள்.
பலியான அங்கித் குமாரின் சகோதரர் அமன் ஜா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொல்லப்பட்டவர் கைப்பட எழுதிய ஏழு பக்க தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதில், கைது செய்யப்பட்ட ஆறு குற்றவாளிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.
அங்கித்துக்கு எதிராக பயிற்சி அதிகாரி உள்பட சிலர் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அங்கித் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்கொலையாக இருந்தாலும், கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து பெற்றோருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக செல்லிடப்பேசி அழைப்புகளை அங்கித் எடுக்காததால், குடும்பத்தினர் கல்லூரி விடுதிக்கு வந்து பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கித் தனது கைப்பட எழுதிய தற்கொலைக் கடிதத்தில், குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரும் தன்னை எந்த வகையில் எல்லாம் துன்புறுத்தினார்கள், மன உளைச்சலுக்கு ஆளாக்கினர் என்பதை தெள்ளத் தெளிவாக எழுதியிருப்பதாகவும் இளைஞரின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது சகோதரனுக்கு அனுப்பிய குறுந்தகவலில் ஏதேதோ ஆவணங்களைக் காட்டி அதில் கையெழுத்திடச் சொல்கிறார்கள் என்று அனுப்பியிருந்ததையும் காவல்துறையினர் கவனத்தில் எடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

