பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பலி: ஒரே மாதத்தில் குடும்பத்தில் நிகழ்ந்த இரட்டை சோகம்! 

ஹைதராபாத்தில் விபத்தில் சிக்கிய பெண் மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :24 செப்டம்பர் 2022, 10:05 am

DIN

ஹைதராபாத்தில் விபத்தில் சிக்கிய பெண் மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஹைதராபாத் மாலக்பேட் பகுதியில் மூன்று நாள்களுக்கு முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்தது. 

பல் மருத்துவரான மருத்துவர் ஸ்ரவாணி செப்.21ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் மோதி கீழே விழுந்தார். மோதிவிட்டு கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார். 

தலையில் பலத்த காயமடைந்த அவர் நிஜாமின் மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி  இன்று காலை இளம் மருத்துவர் உயிரிழந்தார். 

ஸ்ரவாணி ஹஸ்தினாபுரத்தில் உள்ள பல் மருத்துவமனையில் மருத்துவப் பயிற்சி பெற்று வந்தார். கடந்த 25 நாள்களுக்கு முன்பு அவரது தாயார் மாரடைப்பால் இறந்த சோகம் மறைவதற்குள் அவரது குடும்பத்திற்கு இன்னொரு சோகம் நிகழ்ந்துள்ளது. 

இதனிடையே விபத்து ஏற்படுத்திய காரை போலீசார் அடையாளம் கண்டு, கார் ஓட்டிய இளைஞரை கைது செய்தனர். அவர் பழைய மலக்பேட்டையில் வசிக்கும் இப்ராகிம் (19) எனத் தெரிய வந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.