ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெறும் 500 ரூபாய் இருந்தால் போதும் ஜெயிலுக்குப் போகலாம்!

ஒரே ஒரு நாள் எங்காவது சென்று நிம்மதியாக தங்கியிருந்து நாளைக் கழிக்க வேண்டும். ஆனால் செலவும் மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்று கருதினால்..

News image
வெறும் 500 ரூபாய் இருந்தால் போதும் ஜெயிலுக்குப் போகலாம்!
Updated On :28 செப்டம்பர் 2022, 6:40 am

DIN

டேஹ்ராடூன்: ஒரே ஒரு நாள் எங்காவது சென்று நிம்மதியாக தங்கியிருந்து நாளைக் கழிக்க வேண்டும். ஆனால் செலவும் மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்று கருதினால்..

ஜாதகத்தில் கட்டம் சரியில்லை. ஜெயிலுக்குப் போக வேண்டியது வரலாம் என்று ஜோதிடர் சொல்லிவிட்டரா?

எத்தனையோ இடங்களைச் சுற்றிப் பார்த்து விட்டோம். இந்த சிறைக்கூடம் எப்படித்தான் இருக்கும் என்பதை பார்க்கவில்லையே? அதற்காக கொலையா செய்ய முடியும்? என்று ஏங்குகிறீர்களா?

உங்கள் ஏக்கம், துக்கம், அச்சம் எல்லாவற்றையும் போக்குவதற்கு ஒரு யோசனை இருக்கிறது. உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறைச்சாலையின் நிர்வாகம் இந்த உலகிலேயே இல்லாத ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் ரூ.500 செலுத்தினால், ஒரு பகல் மற்றும் ஒரு இரவு சிறைச்சாலையில் கைதிகள் போல தங்கியிருக்கலாம் என்பதே அந்த சலுகை(?) ஜாதகம், ஜோதிடம் போன்றவற்றால் கலக்கமடைந்தவர்களுக்கு இது ஒரு சிறந்த உபாயமாக இருக்கலாம்.

ஹல்த்வானி சிறைச்சாலை 1903ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பிறகு இந்த சிறைச்சாலை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, பாதி கட்டடங்கள் வேறு அலுவல்களுக்கு மாற்றப்பட்டது. மற்ற கட்டடம் அப்படியே விடப்பட்டிருந்தது.

இதனை தற்போது கட்டமைத்து, சிறைக்கு வரும் விருந்தினர்களை வரவேற்கத் தயராகி வருகிறது என்கிறார் சிறைத் துறை அதிகாரி.

இதற்கு முன்பும், இதுபோல மூத்த அதிகாரிகள், சிலரை இவ்வாறு சிறைக்கூடத்துக்குள் அனுமதிக்க ஒப்புக் கொள்வார்கள். அவர்களக்கு உணவு, சிறைக் கைதிகளுக்கான ஆடைகள் கூட வழங்கப்படும். அங்கிருக்கும் உணவுக்கூடத்திலேயே உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.

இதையடுத்தே இதனை சிறைக்கூடமாக மாற்றி விருந்தினர்களை வரவேற்கும் திட்டம் உதித்தது. முதலில் ஜோதிட ரீதியில் பாதிக்கப்படுபவர்களுக்காகவே இதனை திட்டமிட்டோம்.

இதனை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் அரசுக்கு வருமானமும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.