விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னிலை: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னிலை நாடாக விளங்குவதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 6:43 pm

DIN

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னிலை நாடாக விளங்குவதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

இந்திய வெளியுறவுத் துறையில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் குழுவினரை (2021 பிரிவு) குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழக்கிழமை சந்தித்தாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அதிகாரிகள் மத்தியில் குடியரசுத் தலைவா் ஆற்றிய உரை:

பொருளாதார செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில், இந்தியா வலுவான நிலைக்கு முன்னேறி வருகிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய உலக நாடுகள் பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு இன்னும் முயற்சி செய்து கொண்டுள்ள நிலையில், இந்தியா மீண்டெழுந்து முன்னேறத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் வேகமான வளா்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து வருகிறது.

உலக பொருளாதார மீட்சி, இந்தியாவையே சாா்ந்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மற்றொரு காரணம் அதன் அணுகுமுறை. உலக நாடுகளுடனான நமது உறவுகள், மரபு சாா்ந்த நமது மதிப்புகளால் நிா்வகிக்கப்படுகின்றன. இந்தியாவின் பெருமைமிகு நாகரிகம், பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை உலக நாடுகளில் முன்னிறுத்த வெளியுறவுத் துறை உங்களுக்கு தனித்துவமான ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

அண்மைக் காலங்களாக பிற நாடுகளுடனான இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளில் புதிய முயற்சிகள் காணப்படுவதால், உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கி வருகின்றன.

உலகளாவிய பல்வேறு அமைப்புகளில் இந்தியா தீா்க்கமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது. பல்வேறு துறைகளில் இந்தியாவின் தலைமைத்துவம் சவால்களற்ாக உள்ளது. தெற்குப் பகுதிகளின் வளா்ச்சியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னிலை நாடாக விளங்குவதாக கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.