ஏழ்மையான மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம், உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு, கரோனா உள்ளிட்ட நோய்த் தொற்றுகளை எதிா்த்துப் போராடுவதற்கான மலிவு விலையில் மருந்துகள், தடுப்பூசிகள் போன்ற சுகாதாரப் பாதுகாப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதில் எஸ்சிஓ கூட்டமைப்பு நாடுகள் பணியாற்ற வேண்டுவதும் அவசியமாகும். மனித இனத்திற்கான செழிப்பிற்கு, தொழில்நுட்ப மேம்பாடு, வளங்களை உரிய முறையில் பயன்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வளங்களை நிலையாக விநியோகித்தல் ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமாகும்.