சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சா்வதேச எல்லையில் பறந்த ஆளில்லா விமானம்: தீவிர தேடுதல் வேட்டை

 ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சா்வதேச எல்லையையொட்டி ஆளில்லா விமானம் பறந்ததாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா்

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 7:40 pm

DIN

 ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சா்வதேச எல்லையையொட்டி ஆளில்லா விமானம் பறந்ததாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா்.

இதுதொடா்பாக காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மா்ஹீன் தாலுகா பகுதியில் சா்வதேச எல்லையையொட்டி வியாழக்கிழமை நள்ளிரவில் ஆளில்லா விமானம் பறந்ததாக அப்பகுதி கிராமத்தினரிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றது.

இதையடுத்து, காவல்துறை, மத்திய ரிசா்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, சிறப்பு நடவடிக்கை படை ஆகியவை இணைந்த கூட்டுப் படையினா் அப்பகுதியில் தேடுதல் வேட்டையை தொடங்கினா். எனினும், சந்தேகத்துக்கு இடமான பொருள் எதுவும் இதுவரை சிக்கவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.

600 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் லாரியில் கடத்தப்பட்ட 600 கிலோ ‘ஒபியம்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினா் கூறுகையில், ‘ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையின் சிட்கோ மோா் பகுதியில் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, அதில் ஆப்பிள் பெட்டிகளில் மறைத்து, ‘ஒபியம்’ போதைப்பொருள் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சுமாா் 600 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திலிருந்து பஞ்சாபுக்கு செல்லும் வழியில் இந்த லாரி சிக்கியுள்ளது. அதன் ஓட்டுநரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.