சுல்தான்பூர் (உ.பி): உ.பி.யில் அடையாளம் தெரியாத நபர்கள் நகைக்கடைக்காரரிடம் ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
நகைக்கடைக்காரர் ராம்சுக் பர்ன்வால் தனது கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சூரப்பூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள சாமுகேஷ்வர் மகாதேவ் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
ராம்சுக் பர்ன்வால் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து 2 பையுடன் தப்பினர்.
5 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள 5 கிலோ வெள்ளி மற்றும் 35 கிராம் தங்க நகைகள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருடிசென்ற நபர்களை பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக வருவதாக காவல்துறை அவுட்போஸ்ட் இன்சார்ஜ் கவுரவ் அவஸ்தி தெரிவித்தார்.